Book My Iyer

http://bookmyiyer.com/

Friday, September 30, 2016

மல்டி காம்ப்லெஸ் தியேட்டரும் அங்கே நடக்கும் கொள்ளையும்.

சமீபத்தில் ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்கு என் மனைவியோடு சென்றுருந்தேன். படம் நல்ல படம் தான் நான் தேர்ந்து  எடுத்த திரையரங்கம் தான் மட்டமானது.

என்னைப்பொறுத்த வரையில் சென்னையில் கொடுக்கும் காசுக்கு ஏற்ற வசதியை தருவது சத்யம் குழுமம் மற்றும் கமலா சினிமாஸ். மற்ற திரையரங்குகளில்  எல்லாம் ஏதேனும் குறைகள் இருக்கும்.

நான் சென்ற திரையரங்கம் AGS வில்லிவாக்கம். படம்  வருபவர்களை வெறுப்பு ஏற்றுவதில் மிக மிக சிறந்தவர்கள் AGS  சினிமாஸ். ஷோ ஆரம்பிப்பதற்கு 10 நிமிடம் முன்னாள் தான் உள்ளே அனுமதி. அதாவது திரையரங்கத்தினுள் அனுமதி அது வரை நாம் வெயிலிலோமழையிலோ  தான் நிற்க வேண்டும். என் மனைவி உள்ளே சென்றுவிட்டாள், ஐய்யா நான் உள்ளே செல்ல வேண்டும் என்று நான் அங்கு இருந்த பணியாளரிடம் சொன்னேன், அதற்கு அவர்   சொன்ன  பதில் தான் ultimate, கவலை படாதீர்கள் உங்கள் மனைவி உள்ளே safe ஆக இருப்பார் நீங்கள் இங்கே வெயிட் செய்யுங்கள்.  ஏன்டா தனி தனியா போறதுக்கு நாங்க ஏன்டா ஜோடியா வரோம். இப்போல்லாம் எவனும் தியேட்டர்ல படம் பாக்குறது இல்ல, ஏன் என் நண்பர்கள் பல பேர் தியேட்டர் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குறது இல்ல. இப்டியே போனா நானும் அந்த லிஸ்ட்ல சேந்துடுவானோனு பயமா இருக்கு :) .

இதைவிட கொடுமை 3.35 ஷோ உள்ளே அனுமதி இல்லை ஆனால் 3.45 ஷோ நாண்பர்களை உள்ளே அனுமதித்தார்கள். நல்லா வருவீங்கடா.

வெளியே நிற்பதற்கு கூட  ஏதோ கட்டுமான  பணி நடந்துகொண்டு இருந்தது. ஏற்கனனவே இருக்கும் பிரச்னை போதாது அது வேறு என் தலையில் விழுந்து   வேறு .

காசு கொடுத்தும் கேவலமாய் நடத்தும் இவர்களை என்னதான் செய்ய. இதனால் தன பலர் torrent மூலமாய் படம் தரவிறக்கம்  செய்து பார்க்கிறார்கள். நாங்கள் ஒன்றும் ஓசியில் படம் பார்க்க வரவில்லை என்பதை புரிந்து கொள்வார்களா ?

இது சமந்தமாய் மேலும் ஒரு பதிவை பகிர்கிறேன். இதனை நான் வெப்துனியாவில் இருந்து பகிர்கிறேன். நன்றி.

- ராம்

*********************************************************************************

டிவி, யூடியூப், மொபைல், டிவிடி, திருட்டு டிவிடி, இதையெல்லாம் தாண்டி குடும்பத்தோட படம் பார்க்க தியேட்டர் வர்றதுங்கிறது எவ்ளோ பெரிய விசயம் தெரியுமா? வெறுமனே பாப்கார்னும் பப்சும் வாட்டர்பாட்டிலும் வாங்க உங்க தியேட்டருக்கு எவனும் வரமாட்டான்... டியர் மல்டிபிளெக்ஸ் மங்காஸ்.
நேற்று இரண்டாவது முறையாக ஆண்டவன் கட்டளை படத்திற்கு குடும்பத்தோட போனேன்... மொத்தம் 7 டிக்கெட். 840 ரூபாய். வேளச்சேரில இருக்கிற பி.வி.ஆர். மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு.
படம் பார்த்துட்டு வந்து என் மனைவி கேட்கிறாங்க... 'ஏன், அந்த படம் சரியா தெரியல. வெளிறிப்போய் தெரியுது... எடுத்ததே அப்டியா?'ன்னு.
அடேய்... 120 ரூவா டிக்கெட் போனா பரவாயில்ல, நல்லா பார்ப்போம்னு நம்பித்தான்டா உங்க பார்க்கிங் கொடுமை, பாப்கார்ன் கொடுமை, குடிக்கிற தண்ணியில கூட நீங்க பண்ற கொடுமையை கண்டுக்காம விடுறோம். படத்தை மட்டுமாவது ஒழுங்கா காட்ட மாட்டீங்களாடா? ரெண்டரை மணி நேரம் படம் போடுறதுக்கு முன்னாடி ஒண்ணரை மணி நேரத்துக்கு விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறீங்களேடா.... அதையெல்லாம் பொறுத்துக்கிட்டுத்தானடா படம் பார்க்க வரோம். ஓரளவுக்காவது குவாலிட்டியா படம் போடுங்கப்பா... உங்களுக்கு புண்ணியமா போகும். ஏ சென்டர்ல போகுது... பி அண்ட் சி சென்டர்ல போகல.... அங்க போகுது இங்க போகலன்னு ஒரு படத்தை ஓட வைக்கிறதுக்கு பின்னாடி ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு... இதுல, இப்டி நீங்க அரையும் கொறையுமா படம் காட்டுனா வேற என்ன நடக்கும். ஏற்கனவே விஜய்சேதுபதி ப்ரோ ரொம்ப 'கலரா' தெரிவாரு. இதுல நீங்க உங்க பங்குக்கு டல் பண்ணதுல பாவம்!
ரெகுலர் 190 ருவா. லார்ஜ் 240 ருவா. வேற என்ன பாப்கார்ன்தான்... சரி குழந்தை ஆசைப்பட்டு கேட்குதேன்னு 240 ருவா குடுத்து வாங்குனா... கண்டமேனிக்கு உள்ளுக்குள்ள எதை எதையோ கொட்டித் தராங்க... உப்புன்னா உப்பு அப்டி ஒரு உப்பு. த்தூ. கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்... நம்பி வரவனை மதிக்கணும். ச்சீய்.... சொல்லவே கேவலமா இருக்கு.
வாட்டர் பாட்டில் கேட்டா... ஏதோ ஒரே ஒரு கம்பெனி, ஹிமாலயா தான் அவங்க விப்பாங்களாம். அரை லிட்டர் இருக்கும். அதுக்கு 50 ரூவா.... நம்ம ஊர் பாஷையில நாலு மடக்கு தண்ணி.. ஒரு மடக்கு தண்ணிக்கு பத்து ரூவா வச்சா கூட, 40 ருவாயே ரொம்ப ரொம்ப அதிகம்டா நல்லவனுங்களா...!
மத்தவங்களோட ஒப்பிடுறப்போ கமலா தியேட்டர்ல ஸ்நாக்ஸ் விலை ரொம்ப கம்மி.. கண்டிப்பா அதுக்கு அவங்களை பாராட்டணும். அதே மாதிரி இந்த பேலஸோவா, பலாஸோ வா... அந்த தியேட்டர்ல சீட் ரொம்ப சௌகர்யமா இருக்கு. இந்த தியேட்டர்ல மட்டும்தான் கால் இடிக்காம கடைசி சீட்டுக்கு தாராளமா யோயிட்டு வரமுடியும்... இந்த ரெண்டு விசயத்துக்காக இந்த ரெண்டு தியேட்டர்காரங்களையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கேன்.
சின்னச் சின்ன தியேட்டருக்கு போனா, திரையில் காட்சிகள் சரியா இருக்காது... சவுண்ட் சரியா இருக்காதுன்னா தான் மல்டிபிளெக்ஸ் தியேட்டருக்கு வரோம்.
#ஆண்டவன்கட்டளை படத்துல #விஜய்சேதுபதி வாடகை வீட்டு ஓனர் கிட்ட சொல்வாரு... "வீடுன்னா கரெண்ட் இழுக்கணும்... தண்ணி பைப் மாட்டணும்.. பல்ப் போடணும்.... அதெல்லாம் செஞ்சா தான் அதுக்குப் பேர் வீடு.. அதுக்கும் சேர்த்துதானே வாடகை வாங்குறீங்க"ன்னு....
அதே மாதிரி... தியேட்டருன்னா... நல்ல சீட் வேணும்... நல்லா படம் தெரியணும்... நல்லா சவுண்ட் இருக்கணும்... அதைத்தான நாங்க கேட்குறோம். அதானே தியேட்டரு. அதுக்குத்தான டிக்கெட்டுக்கு காசு வாங்குறீங்க...
நல்லா பாப்கார்ன் வேணும்... எஸ்கலேட்டர் வேணும்... சும்மா தியேட்டருக்கு வெளியே நல்லா தண்ணியடிக்கிற பார் மாதிரி லைட் போட்டு ஏமாத்தணும்...னு நாங்க கேட்டமா? கூல் டிரிங்ஸ்ங்கிற பேர்ல பூச்சி மருந்தை விக்கிறதைக்கூட நாங்க ஏன்னு கேக்கலியேப்பா... அதை ஸ்டேட்டசுன்னு நெனைச்சு ஸ்டைலா உள்ள ஊத்துறோம்... அதைக்குடிச்சு குடிச்சே கேரளாவுல ஒரு சினிமா இயக்குநர் சீக்கிரமா போய்ச் சேர்ந்துட்டாரு.
என்னமோ நீங்க தான் சினிமாவை கண்டுபிடிச்ச மாதிரி ரொம்ப பண்ணாதீங்கடா டேய்... வயித்தெறிச்சலா இருக்கு. 
தயவு செஞ்சி இந்த தண்ணி, பாப்கார்ன், ஸ்நாக்குசு... இதுல காசு பார்க்க அலையாதீங்க... அதோட வாங்குற காசுக்கு ஓரளவுக்கு குவாலிட்டியா படம் காட்டுங்க
- முருகன் மந்திரம் திரைப் பாடலாசிரியர்



Thursday, September 8, 2016

இருமுகன் - ஒரு முகம் மட்டுமே பிரகாசம்

Image result for irumugan

விக்ரமிற்கு கடந்த 6 -7 வருடங்களககவே கட்டம் சரியில்லை. கடந்த 11 படங்களில் 2 மட்டுமே வணிகரீதியாக நன்றாக சென்ற படங்கள், அவை இரண்டுமே ஷங்கரின் திரைப்படங்கள்.

விக்ரம் போன்ற மகா மெகா நடிகன் ஏன் கதையை பார்த்து தேர்ந்து எடுப்பதில்லை என்பது என்னுடைய நெடு நாள் சந்தேகம். தான் நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் படத்தை ஒத்துக்கொள்வர் போல. ஆனால் ஒரு படம் நன்றாக போவதற்கு கதை எவ்ளோ முக்கியமோ திரைக்கதை மற்றும் மேக்கிங் மிக மிக அவசியம். அதனால் தான் விஜய் அஜித் போன்றவர்களின் படங்கள் விக்ரம் படத்தை காட்டிலும் வசூலில் சொல்லி அடிக்கின்றன .

ஒரு காலத்தில் தில்,தூள்,சாமி,காசி,பிதாமகன் என்று வீடு கட்டி அடித்தவர் விக்ரம். விஜய் அஜித்தெலாம் இனி அம்புட்டு தான் என எல்லோரும் நினைத்த நேரம் அது. விக்ரம் செய்த தவறு கடந்த 10 வருடங்களாக அவர் ஒரு ஒரு படங்களுக்கு எடுத்து கொண்ட நேரம், அவருடைய தலை எழுத்து அந்த படங்கள் பப்படம் ஆனது.

விக்ரம் தனக்கு கொடுக்க படும் பாத்திரம் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுவதால் தான் சமீபத்தில் அவர் படங்கள் பப்படம் ஆகிறது. ஒரு திரைப்படம் நன்றாக இல்லை ஆனால் அதில் வரும் குணச்சித்திர நடிகர் நன்றாக நடித்துள்ளார் ஆனால் அது மட்டும் அந்த படத்திற்கு வெற்றியை கொடுக்காது. அது தான் இப்பொழுது விக்ரம் படங்களுக்கு நடந்து கொண்டு இருக்கின்றது.


Image result for irumugan


ஹ்ம்ம் வழக்கம் போல இந்த திரைப்படத்திற்கும் விக்ரம் உடல்,உயிர்,தாடி எல்லாத்தையும் கொடுத்து உள்ளார். படத்தின் ஆக மொத்த குறை என்றால் ஒரு crime திரில்லர் இன்வெஸ்டிகஷன் படம் காட்சிக்கு காட்சி வேகமாக அதேநேரம் ஒரு ஒரு முடிச்சாக அவிழ வேண்டும். இங்கு நடப்பதோ விக்ரமும்,நித்யா மேனனும் காரில் வில்லன் கெங்கை follow செய்கிறார்கள், திடீர் என விக்ரம்,நயன்தாரா சம்மந்த  பட்ட பிளஷ்பக் portion விரிகிறது, காட்சிகளாக சென்றால் பரவாயில்லை ஆனால் தேவை இல்லாத ஒரு பாடல் காட்சி வந்து கடுப்பேத்துகிறது . பின் மீண்டும் follow  செய்யும் காட்சி, ஆனால் தேவை இல்லாமல் விரிந்த flashback ஆல் படத்திற்கு முக்கியமான இன்டெர்வல் pre-sequenceஇல் நம்மால் ஒன்ற முடியவில்லை.

Image result for joker nurse
Image result for irumugan nurse



பேட்மேன் darknight வந்த பொழுது ஜோக்கர் கேரக்டர் யார் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் பொழுது என் கண்முன்னே நின்றவர் விக்ரம்தான். இருமுகனில் பிரகாசமான முகம் இந்த முகம் தான் LOVE . ஹாஸ்பிடல் sequence படத்திற்கு பக்கா பக்கபலம். ஜோக்கர் செய்யும் அட்டூழியம் போல இந்த படத்தில் லவ் பாத்திரம் அந்த ஹாஸ்பிடலில் செய்யும்  சேட்டை  அட்டகாசம்.


தம்பி ராமைய்யா சில இடங்களில் சிரிப்பு பல இடங்களில் கடுப்பு. நயன் வழக்கம் போல நடிப்பு,glamour இரண்டும் கலந்து அடித்து இருக்கிறார்.

இருமுகனின் பலம் விக்ரம் தான், அவர் என்ன செய்தாலும் அது செயற்கை ஆக தெரிய வாய்ப்பே இல்லை. அந்த பிரம்மன் இவரை நடிப்பதுக்காக படைத்தான் போல.

படம் ராஜபாட்டை,10எண்றதுக்குள்ள பொல்லா மொக்கை இல்லை, ஆனால் திரைக்கதை இன்னும் concentrate செய்து இருந்தால் நல்ல திரில்லர் கம் action படமாக வந்து இருக்கும். விக்ரம் விழித்துக்கொண்டு கதை கேட்கும் நேரம் வந்து விட்டது, விழித்தால் நல்லது.

- ராம்