கபாலி கடந்த 2 வாரங்களாக தமிழகமே கூறிக்கொண்டு இருந்த ஒரு மந்திரம்.ஒரு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பது சாதாரண விடயம். அதுவே ஒரு முன்னேறும் ஒரு டைரக்டர் மெட்ராஸ் போன்ற படத்தை இயக்கிய ஒருவர் படம் என்றால் சாதாரண ரசிகன் கூட அந்த திரைப்படம் எப்படி இருக்கும் என எண்ணுவான்.
அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினிகாந்த் இணைந்ததால் எதிர்பார்ப்பு பன்மடங்கு ஆனது. ரஜினிகாந்த் படங்களுக்கு எப்பொழுதுமே தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு உண்டு ஆனால் இந்த படத்தை ஒட்டு மொத்த தென் தமிழகமே எதிர்பார்த்தது எப்படி ?
கலைப்புலி S .தாணு ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தந்தவர். இதுவரை ரஜினியை வைத்து அவர் தயாரித்தது இல்லை. அதற்கு காரணம் அவர் முன்னாளில் சந்தித்த பல நஷ்டங்கள். ஆளவந்தான் தயாரித்து மரண அடிவாங்கியவர். பின்பு வணிகரீதியாக அவரை சிறிது எழுப்பி விட்டது சச்சின், காக்க காக்க மற்றும் மாயாவி போன்ற படங்கள் தான். தன் மகனை டைரக்டர்ஆக்கி தனக்கு தானே சூடு வைத்துக்கொண்ட படம் சக்கரைகட்டி.
அதன் பின் அவர் இன்று வரை செய்த மிக பிரம்மாண்டமான பிசகு கந்தசாமி. எப்படி சுசி கணேசன் இந்த கதையை ஓகே செய்தார் தாணுவிடம் என்பது இன்னும் புரியாத புதிர். அந்நியன்,ரமணா,இந்தியன் போன்ற படங்களை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்திவிட்டு கொஞ்சம் சூப்பர் ஹீரோ மாஸ்க்கை தூவினால் அது கந்தசாமி.
இந்த திரைப்படத்திற்கு பின் அவர் அடுத்த திரைப்படம் தயாரிக்க 3 வருடங்கள் ஆனது. துப்பாக்கி எப்பேர் பட்ட படம் என்பது எல்லோரும் அறிந்தது. தாணுவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சென்ற திரைப்படம் துப்பாக்கி. பின் தெறி மூலம் பழைய formku திரும்பினார்.
ரஜினியை வைத்து படம் எடுப்பதில் லாபமும் உள்ளது ரிஸ்கும் உள்ளது. தாணு செய்த ப்ரோமோ என்னவென்று நான் சொல்ல வேண்டியது இல்லை. aeroplaneஇல் போஸ்டர் அடித்தார்,சிம் கார்டு ரிலீஸ் செய்தார் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கெல்லாம் உச்சம் இதுவரை யாரும் செய்யாதது இது தாணுவின் தந்திரம் என கூறலாம். படம் பப்படம் அவதால் தானே வசூல் வராது, சாமானிய ரசிகன் மிஞ்சிப்போனால் 120 அல்லது அதிகபட்சம் 200 வரை குடுத்து பார்ப்பான், ஆனால் IT company என்னும் கார்பொரேட் ???.
இப்பொழுதெல்லாம் படம் ஓடுவது முதல் மூன்று நாட்களே,ஓரளவு சுமார் என்றால் இன்னும் இரண்டு வாரங்கள் அவ்ளோதான் அந்த படத்தின் உயிர் நாடி.இதை தாணு முன்னாட்களில் வாங்கிய அடிகளின் பலனாய் நன்றாக புரிந்துகொண்டு படத்தை JAZZ சினிமாஸ் இடம் விற்றார், அது யாருடைய குரூப் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். படம் அரசிடமே உள்ளதால் எல்லா திரைஅரங்கம் ஒன்லைன் புக்கிங் 200,300 என்று விற்றனர். இதற்கு எதிராக தொடுக்க பட்ட பொதுநல வழக்கு ஈஸியாக தள்ளுபடி செய்யப்பட்டது.ஓன்லைனினிலேயே 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றால் பல தியேட்டர்கள் புக்கிங் ஓபன் செய்யவே இல்லை, நேராக சென்று டிக்கெட் விலை விசாரித்தால் 1000,2000 என கூறுபோட்டனர்.
So சாதாரண ரசிகன் எவ்ளோ காசு குடுத்து கண்டிப்பாக பார்ப்பதற்கு யோசிப்பான். கார்பொரேட் கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்ய வைத்தால். ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு வைத்தால் யோசித்து பாருங்கள்.
ரஜினி எனும் பொண் முட்டை இடும் வாத்தை தாணு 3 நாட்களில் அறுத்து உள்ளார். இதற்கு கண்டிப்பாக ரஜினியும் சப்போர்ட் செய்து இருப்பார்.
ரஜினி பழசை மறந்து இருக்க மாட்டார் என நம்புவோம், அவர் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு கார்பொரேட் கம்பெனிகளோ அல்லது தாணுவோ காரணம் இல்லை, சாமானிய ரசிகனின் விசிலும்,கைதட்டலும் தான் அவரை இங்கே உட்கார வைத்துள்ளது.
இப்பொழுது படத்திற்கு நெகட்டிவ் ரெவியூஸ் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் படம் நல்ல வசூலை கண்டிப்பாக பெரும். விமர்சனங்களுக்கும், மௌத் டால்க் இரண்டும் இந்த படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.இப்பொழுது சாமானிய மக்களுக்கு டிக்கெட் வரும் திங்களில் இருந்துதான் கிடைக்கும், அதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு வார இறுதிக்கு இந்த மொக்கை படம் ஓடும், அதை ஓட்டுவதற்கு தாணு கண்டிப்பாக ஒரு ப்ரோமோ ரெடி செய்திருப்பார்.
இத்தனை அரசியல் இந்த திரைப்படத்தை சூழ்ந்து உள்ளது, இது நம்மக்கு தெரிந்த விடயங்கள், இன்னும் தெரியாத விடயங்கள் பல இருக்கலாம்.
எப்பொழுதும் தமிழன் நல்ல திரைப்படங்களை ஆதரிப்பான் இப்பொழுது கபாலி உங்கள் கையில்.
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் தாணுவும், ரஜினியும் பிளக்க மாட்டார்களா என்ன ?
-ராம்
அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினிகாந்த் இணைந்ததால் எதிர்பார்ப்பு பன்மடங்கு ஆனது. ரஜினிகாந்த் படங்களுக்கு எப்பொழுதுமே தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பு உண்டு ஆனால் இந்த படத்தை ஒட்டு மொத்த தென் தமிழகமே எதிர்பார்த்தது எப்படி ?
கலைப்புலி S .தாணு ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை தந்தவர். இதுவரை ரஜினியை வைத்து அவர் தயாரித்தது இல்லை. அதற்கு காரணம் அவர் முன்னாளில் சந்தித்த பல நஷ்டங்கள். ஆளவந்தான் தயாரித்து மரண அடிவாங்கியவர். பின்பு வணிகரீதியாக அவரை சிறிது எழுப்பி விட்டது சச்சின், காக்க காக்க மற்றும் மாயாவி போன்ற படங்கள் தான். தன் மகனை டைரக்டர்ஆக்கி தனக்கு தானே சூடு வைத்துக்கொண்ட படம் சக்கரைகட்டி.
அதன் பின் அவர் இன்று வரை செய்த மிக பிரம்மாண்டமான பிசகு கந்தசாமி. எப்படி சுசி கணேசன் இந்த கதையை ஓகே செய்தார் தாணுவிடம் என்பது இன்னும் புரியாத புதிர். அந்நியன்,ரமணா,இந்தியன் போன்ற படங்களை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்திவிட்டு கொஞ்சம் சூப்பர் ஹீரோ மாஸ்க்கை தூவினால் அது கந்தசாமி.
இந்த திரைப்படத்திற்கு பின் அவர் அடுத்த திரைப்படம் தயாரிக்க 3 வருடங்கள் ஆனது. துப்பாக்கி எப்பேர் பட்ட படம் என்பது எல்லோரும் அறிந்தது. தாணுவை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சென்ற திரைப்படம் துப்பாக்கி. பின் தெறி மூலம் பழைய formku திரும்பினார்.
ரஜினியை வைத்து படம் எடுப்பதில் லாபமும் உள்ளது ரிஸ்கும் உள்ளது. தாணு செய்த ப்ரோமோ என்னவென்று நான் சொல்ல வேண்டியது இல்லை. aeroplaneஇல் போஸ்டர் அடித்தார்,சிம் கார்டு ரிலீஸ் செய்தார் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இதற்கெல்லாம் உச்சம் இதுவரை யாரும் செய்யாதது இது தாணுவின் தந்திரம் என கூறலாம். படம் பப்படம் அவதால் தானே வசூல் வராது, சாமானிய ரசிகன் மிஞ்சிப்போனால் 120 அல்லது அதிகபட்சம் 200 வரை குடுத்து பார்ப்பான், ஆனால் IT company என்னும் கார்பொரேட் ???.
இப்பொழுதெல்லாம் படம் ஓடுவது முதல் மூன்று நாட்களே,ஓரளவு சுமார் என்றால் இன்னும் இரண்டு வாரங்கள் அவ்ளோதான் அந்த படத்தின் உயிர் நாடி.இதை தாணு முன்னாட்களில் வாங்கிய அடிகளின் பலனாய் நன்றாக புரிந்துகொண்டு படத்தை JAZZ சினிமாஸ் இடம் விற்றார், அது யாருடைய குரூப் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். படம் அரசிடமே உள்ளதால் எல்லா திரைஅரங்கம் ஒன்லைன் புக்கிங் 200,300 என்று விற்றனர். இதற்கு எதிராக தொடுக்க பட்ட பொதுநல வழக்கு ஈஸியாக தள்ளுபடி செய்யப்பட்டது.ஓன்லைனினிலேயே 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றால் பல தியேட்டர்கள் புக்கிங் ஓபன் செய்யவே இல்லை, நேராக சென்று டிக்கெட் விலை விசாரித்தால் 1000,2000 என கூறுபோட்டனர்.
So சாதாரண ரசிகன் எவ்ளோ காசு குடுத்து கண்டிப்பாக பார்ப்பதற்கு யோசிப்பான். கார்பொரேட் கம்பனிகளுக்கு bulk புக்கிங் செய்ய வைத்தால். ஒரு டிக்கெட் 500 ரூபாய்க்கு வைத்தால் யோசித்து பாருங்கள்.
ரஜினி எனும் பொண் முட்டை இடும் வாத்தை தாணு 3 நாட்களில் அறுத்து உள்ளார். இதற்கு கண்டிப்பாக ரஜினியும் சப்போர்ட் செய்து இருப்பார்.
ரஜினி பழசை மறந்து இருக்க மாட்டார் என நம்புவோம், அவர் இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருப்பதற்கு கார்பொரேட் கம்பெனிகளோ அல்லது தாணுவோ காரணம் இல்லை, சாமானிய ரசிகனின் விசிலும்,கைதட்டலும் தான் அவரை இங்கே உட்கார வைத்துள்ளது.
இப்பொழுது படத்திற்கு நெகட்டிவ் ரெவியூஸ் வந்து கொண்டிருக்கிறது ஆனாலும் படம் நல்ல வசூலை கண்டிப்பாக பெரும். விமர்சனங்களுக்கும், மௌத் டால்க் இரண்டும் இந்த படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.இப்பொழுது சாமானிய மக்களுக்கு டிக்கெட் வரும் திங்களில் இருந்துதான் கிடைக்கும், அதனால் கண்டிப்பாக இன்னும் இரண்டு வார இறுதிக்கு இந்த மொக்கை படம் ஓடும், அதை ஓட்டுவதற்கு தாணு கண்டிப்பாக ஒரு ப்ரோமோ ரெடி செய்திருப்பார்.
இத்தனை அரசியல் இந்த திரைப்படத்தை சூழ்ந்து உள்ளது, இது நம்மக்கு தெரிந்த விடயங்கள், இன்னும் தெரியாத விடயங்கள் பல இருக்கலாம்.
எப்பொழுதும் தமிழன் நல்ல திரைப்படங்களை ஆதரிப்பான் இப்பொழுது கபாலி உங்கள் கையில்.
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் தாணுவும், ரஜினியும் பிளக்க மாட்டார்களா என்ன ?
-ராம்